கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தை கொலை
கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (19). இவர்களுக்கு 11 மாதங்களேயான கலையரசன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் மாயமான பிரியா கேரளா மலப்புரத்தில் ஜெயசூர்யாவுடன் தங்கியிருந்துள்ளார். பிரியாவின் உறவினர் சிவப்பிரகாச தற்செயலாக அவரை பார்த்து பின்னர் குழந்தை எங்கே என கேட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தையை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Tags :