வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்.

by Editor / 17-04-2023 09:50:04am
வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்.

வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்.
வீரப்பனின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவராக அறியப்பட்ட மீசைக்கார மாதையன் கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த மாதையனுக்கு உடல்நிலை மோசமானது. கடந்த 11ஆம் தேதி உடல்நிலை மோசமாகி அவர் நினைவிழந்தார். இதையடுத்து மைசூர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காகப் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நினைவு திரும்பாமலே நேற்று மாலை மாதையன் உயிரிழந்தார். வீரப்பன் கூட்டாளி என்று சிறையிலிருந்த கடைசி நபர் மீசைக்கார மாதையன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories