பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்வீசி தாக்குதல்-2 பெண்கள் படுகாயம்.

by Editor / 17-04-2023 09:29:16am
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்வீசி தாக்குதல்-2 பெண்கள் படுகாயம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 16ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது இந்த ரயில் மதுரை திருமங்கலம் இடையே கப்பலூர் டோல்கேட் அருகே செல்லும் பொழுது இரவு.9.20. மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் அப்பொழுது அந்த ரயிலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலா என்கின்ற இளம் பெண்ணும் அதே பெட்டியில் தென்காசி  அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண்ணும் அடுத்தடுத்து இருந்துள்ளனர் கப்பலூர் டோல்கேட் அருகே கல் வீசிய மர்ம நபர்களால் இந்த இரண்டு பெண்களும் காயம் அடைந்தனர் மேலும் கலா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மேலும் மாரிச்செல்விக்கும் காயம் ஏற்படவே உடனடியாக பயணிகள் ரயிலை நிறுத்தினர் இதன் தொடர்ச்சியாக ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆறுமுக பாண்டியன் மற்றும் தீபா ஆகியோர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கோச்சில் விசாரணை மேற்கொண்டதில் கல்வி சி தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தது தொடர்ந்து உடனடியாக அந்த பெண்களுக்கு ரயில் பெட்டியில் இருந்து முதலுதவி அளிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக மதுரை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றவுடன் ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு பெண்களும் இரக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கப்பலூர் டோல்கேட் பகுதியில் திடீர் ஆய்வுகள் நடத்தினர் அந்த பகுதியில் யாரும் சிக்காத நிலையில்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டு இளம் பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்வீசி தாக்குதல்-2 பெண்கள் படுகாயம்.
 

Tags : POTHIKAI EXPRESS RAIL

Share via