சாலை விபத்தில் 4 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பயங்கர சாலை விபத்து நடந்தது. அதிகாலை 2 மணியளவில் சர்க்கரை ஏற்றிச் சென்ற லாரி தனியார் பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பேருந்து மற்றும் லாரியின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
Tags :