ட்ரோன் தாக்குதலில் 43 பேர் பலி

by Staff / 11-09-2023 03:45:45pm
ட்ரோன் தாக்குதலில் 43 பேர் பலி

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த அதிகாரப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். நாட்டின் தலைநகரான கார்டூமில் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 36க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via