பூஞ்ச் தாக்குதல் 5 வீரர்கள் பலி : 30 பேரிடம் விசாரணை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் ராணுவ டிரக் மீது பதுங்கியிருந்து 5 வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இதுவரை 30 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கர தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்தார். மூடப்பட்ட ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்துக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
Tags :