ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

by Staff / 27-10-2023 01:32:52pm
ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்திற்கான நிதி ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பண்டிகை காலம் நெருங்குவதால், 100 நாள் வேலைத் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,696 கோடியை விடுவிக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக ஒதுக்கிய ரூ.1755.43 கோடியில் ரூ.418.23 கோடி மட்டுமே வரவு வைகப்பட்டுள்ளது. நிலுவையுடன் சேர்த்து மொத்தம் ரூ.2696.77 கோடியையும் உடனே விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via