பெட்ரோல் பங்கில் பெரும் விபத்து

by Staff / 24-04-2023 01:19:02pm
பெட்ரோல் பங்கில் பெரும் விபத்து

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெட்ரோல் நிலையத்தில் பேருந்துக்கு டீசல் நிரப்பும் போது பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தி.நகரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் டிராவல்ஸ் பஸ்சில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டீசல் எரிபொருளில் தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via