17 வயது பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை..... அதிகாரிகள் விசாரணை.

by Staff / 27-10-2023 01:06:16pm
  17 வயது பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை..... அதிகாரிகள் விசாரணை.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவி, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று நாட்கள் முன், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த 24ம் தேதி, மாணவிக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.தகவல் அறிந்து அதிகாரிகள் விசாரிக்கும்போது, பள்ளி மாணவி, காஞ்சிபுரம் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்துள்ளது.
மாணவியின் உடல் நலம் மற்றும் உளவியல் குறித்து, குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via