105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல்

by Staff / 24-04-2023 02:19:21pm
105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல்

தலைவாசல் அருகே வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஆன்டனி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது புதர் மறைவில் வைத்து பாக்கெட் சாராயம் விற்ற நபர் போலீசில் சிக்கினார். விசாரணையில் அவர் கெங்கவல்லி தாலுகா 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 47) என்பதும், சாராயம் காய்ச்சி அதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 105 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via