அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் - 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்.

by Editor / 26-04-2023 11:06:06pm
அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் - 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்.

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவனத்தில் பணியாற்றும்  தொழிலாளியான இவர்  இவரது மனைவி கமலினி (24). என்பவரை கடந்த 22ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அங்கு அவரது மனைவி கமலினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினியின் அருகிலிருந்த இரண்டுபெண்கள் எஸ்தர் ராணி, உமா ஆகியோர் உதவி செய்வதுபோல் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனை மற்றும் அந்தப்பகுதிகளிலுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி, 12 மணி நேரத்தில் குழந்தையை கடத்திய உமாவை கள்ளக்குறிச்சி அருகே மடக்கிப்பிடித்து குழந்தையை மீட்டனர்.எஸ்தர் ராணியை தேடிவருகின்றனர். 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

Tags :

Share via