தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவரது சுப்பிரமணி மகன் குமார். ஈரோட்டில் தனியார் டெக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் கரூர் ஜெகதாபியை சேர்ந்த மணிகண்டன் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது சொந்தமான பைக்கில் நேற்று இரவு குமார் என்பவரை அமர வைத்துக் கொண்டு மனவாசி டோல் பிளாசா சென்று விட்டு உப்பிடமங்கலம் மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்றபோது தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் குமார் கரூர் தனியார் மருத்துவமனை முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் வந்தபோது இறந்து விட்டார். குமாருக்கு ஒரு மகள் மற்றும் மனைவி சத்யா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து இறந்து போனவரின் தந்தை கொடுத்த புகாரின் படி ஜெகதாபியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் மணிகண்டன் 30 என்பவர் மீது மாயனூர் போலீசார் வழக்கு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :