விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்- இருவர் கைது.

by Staff / 21-10-2023 02:34:25pm
விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்- இருவர் கைது.

சார்ஜாவில் இருந்து நேற்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அப்போது திருவாரூர் பகுதியை சேர்ந்த தீபா(28) மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய இரண்டு பயணிகள் உள்ளாடை மற்றும் வயிற்று பகுதிக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2. 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு 1. 57 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via