கல்லூரி மாணவர் தற்கொலை

by Staff / 03-02-2023 02:01:44pm
கல்லூரி மாணவர் தற்கொலை

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கீரனூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் யுவன் சங்கர் (18). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் உள்ளே அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து யுவன் சங்கரின் தந்தை பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via