இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி நடக்கிறது: ராமதாஸ்
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால் அதனை பொதுப் பிரிவினருக்கு வழங்க UGC முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். அப்படி காலியாக இருக்கும் இடங்களை சிறப்பு ஆள் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
Tags :