தமிழகத்தில் இனி ஒரே குளு குளு தான்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

by Editor / 28-04-2023 09:58:22am
தமிழகத்தில் இனி ஒரே குளு குளு தான்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via