குலசேகரம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

by Staff / 04-06-2023 02:43:32pm
குலசேகரம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குலசேகரம் அருகே உள்ள இடைக்காட்டான் காலா மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜய் குமார், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி விஜயகுமாரி (வயது 59). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட் களாக விஜயகுமாரிக்கும் அவரது கணவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை விஜயகுமாரி விஷம் குடித்து பக்கத்து தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிட்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீ சார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via