மனைவியுடன் ஏற்பட்ட தகராறு கணவர் தூக்கிட்டு தற்கொலை.

by Staff / 06-11-2023 01:02:50pm
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு கணவர்  தூக்கிட்டு  தற்கொலை.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வி. பெரியகுளம் வெள்ளயம்பட்டியை சேர்ந்த துரை பாண்டியின் மகன் சிவபாலன் (35) என்பவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர் சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு கடந்து ஆண்டு சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் இவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியில் கண்மாய் கரை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via