கடும் வெள்ளப்பெருக்கு- அடித்து செல்லப்பட்ட பாலம்

by Staff / 21-09-2022 11:13:36am
கடும் வெள்ளப்பெருக்கு- அடித்து செல்லப்பட்ட பாலம்

ஃபியோனா சூறாவளியின் பயங்கர தாக்கத்தால் போர்ட்டோ ரிக்கோ தீவில் மின்சாரம் இல்லாமல் மக்கள் கஷ்படப்பட்டுகொண்டிருக்கின்றனர். சூறாவளி காற்றுடன், மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் அங்கிருந்த பாலம் அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தீவின் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவாக இது கருதப்படுகிறது. வெள்ளப்பெருக்கில் சிக்கி பாலம் அடித்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via