கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் - மத்திய அரசு அனுமதி
சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தப் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :