சவுதியில் உயிரிழந்த தமிழர் - உடலை மீட்டுத் தர கோரிக்கை

by Staff / 07-05-2023 02:09:15pm
சவுதியில் உயிரிழந்த தமிழர் - உடலை மீட்டுத் தர கோரிக்கை

சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் - பத்மாவதி தம்பதி. இவர்களின் மகன் சீதாராமன், சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதிக்கு பெட்ரோல் என்ஜினீயர் பணிக்காக, கடந்த திங்கட்கிழமை சவுதி அரேபியாவிற்கு சென்றார். அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் அவர் சீதாராமன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் தங்களின் மகனின் உடலை மீட்டுத் தரக்கோரி உயிரிழந்தவரின் தாய் பத்மாவதி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

 

Tags :

Share via