திருமணம் முடிந்ததும் மாரடைப்பால் மணமகன் பலி

by Staff / 07-05-2023 05:06:19pm
திருமணம் முடிந்ததும் மாரடைப்பால் மணமகன் பலி

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஜுவகோடியைச் சேர்ந்த திலீப் பிரகாஷ் என்பவருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி என்பவருக்கும் கடந்த மே 3ஆம் தேதி அதிகாலையில் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் முடிந்தவுடன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் வீட்டிற்க வந்து பார்த்தபோது திலீப் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via