போதையில் மணமேடையில் மட்டையான மாப்பிள்ளை

by Staff / 11-05-2023 03:55:03pm
போதையில்  மணமேடையில் மட்டையான மாப்பிள்ளை

அசாம் மாநிலத்தில் குடி போதையில் வந்த மணமகன் மேடையில் தூங்கியதால் மணப்பெண் திருமணம் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் நல்பாரி நகரைச் சேர்ந்த பிரசென்ஜித் என்ற நபருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மணமகன் குடிபோதையில் திருமண மேடைக்கு வந்துள்ளார். இதனையடுத்து, ஐய்யர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும்போது குடிபோதையில் இருந்த மணமகன் அமர முடியாமல் அங்கேயே தூங்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த, மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்து மணமகன் வீட்டார் மீது மணமகள் காசல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

Tags :

Share via