கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பானை ரத்து செய்ய உத்தரவு

by Staff / 11-05-2023 03:56:55pm
கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பானை ரத்து செய்ய உத்தரவு

பழனி தண்டாயுதபாணி கோவிலில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பானை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளதாக திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்தார். பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

 

Tags :

Share via