சிறுவனை கடித்து குதறிய பன்றி

by Staff / 14-03-2023 04:28:49pm
சிறுவனை கடித்து குதறிய பன்றி

மகாராஷ்டிர மாநிலம் கொண்டா மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் திடீரென வந்த பன்றி ஒன்று சிறுவனை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறினான். தொடர்ந்து அருகிலிருந்த மக்கள் அச்சிறுவனை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அந்த பன்றி விடாமல் சிறுவனை கடித்துக் கொண்டிருந்தது. இறுதியாக பன்றியிடம் இருந்து சிறுவன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via