திருப்பதியில் அம்பானி குடும்பத்தினர் சாமி தரிசனம் - 1.5 கோடி காணிக்கை

by Staff / 17-09-2022 01:27:57pm
திருப்பதியில் அம்பானி குடும்பத்தினர் சாமி தரிசனம் - 1.5 கோடி காணிக்கை

பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

மேலும் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.1.5 கோடி காணிக்கையையும் அவர் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் கோவிலின் புனரமைப்பு, மேம்பாட்டு பணிகளுக்கு காணிக்கை வழங்குவது தனது திருப்தி அளிப்பதாகவும், இது தொடரும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் அவர் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via