4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

by Admin / 26-02-2022 10:50:13am
 4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

ராஜஸ்தான் மாநிலம், சிக்கர் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

பிஜர்னியா கி தானி என்னும் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

சிறுவனை மீட்கும் பணியில் காவல்துறை, தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்
 
ஆழ்துளை கிணற்றில் சிறுவனின் அசைவுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.


 
 

 

Tags :

Share via