டில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு -4 பேர் பலி

by Editor / 24-09-2021 03:27:45pm
 டில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு -4 பேர் பலி

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜிதேந்தர் மான் கோகி எனும் ரவுடியை காவலர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இன்று ரோகினி கீழமை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை தீர்த்துக் கட்ட வழக்கறிஞர் உடையில் தயாராக இருந்த அவருடைய எதிரிகள், சமயம் பார்த்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஜிதேந்தர் மான் கோகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடியும் ஜிதேந்தர் மான் கோகியின் எதிரியுமான சுனிலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஜிதேந்தர் மான் கோகிக்கும், சுனில் என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்துவருவதாகவும், இதனால், 20 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

 

Tags :

Share via