17 வயது சிறுவன் தற்கொலை

by Staff / 13-05-2023 05:26:04pm
 17 வயது சிறுவன் தற்கொலை

சேலம் கிச்சிபாளையம் காளிகவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தீனா (வயது 17). இவர் மேள கலைஞராக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பா ளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீனா வின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via