குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை 

by Editor / 14-05-2023 06:30:24pm
குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை 

தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் சரகம் வல்லம்  கிணற்றடி தெருவை சேர்ந்த இசக்கி என்பவரது  மகன் சுடலை( வயது 45) இவர் கேரளாவிலிருந்து குற்றால ஸீசனுக்கு பழங்கள் வாங்கிவந்து மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார்.கேரளாவில் கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இவர் உறவினர் ஒருவர் இறந்த விசேஷத்திற்கு ஊருக்கு வந்தநிலையில் இன்று உறவினர் விட்டு விசேஷம் நடந்தநிலையில் இவர் வல்லம் வண்ணான் துறை பகுதியில் உள்ள சுடலை மாடன் கோவில் அருகே உள்ள தோப்பு பகுதிக்கு  சென்று விட்டு ஒருமரத்தின் அடியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது அப்போது அவரை அதே பகுதியைசேர்ந்த மர்ம நபர்கள்  கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை மற்றும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்,தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து  கொலைசெய்யப்பட்ட நபரின் உடலை பார்வையிட்டு சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுடலையின் உடலைப்பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும்  உறவினர்கள் கதறி அழுதனர். மேலும்இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வீசி தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை 
 

Tags :

Share via