கேரள அரசு பேரூந்தில் இளம் மருத்துவரிடம் பிறப்புறுப்பை வெளிப்படுத்திய மதுரை வாலிபர் கைது.
திருவனந்தபுரம்: நேற்று இரவு 8.15 மணியளவில் கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பேரூந்தில் 3 பேர் அமரும் இருக்கையில் பெண் மருத்துவர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் மர்பாலம்-தம்பனுர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தனது உடையை கழற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் மற்றும் பெண் மருத்துவர் திரும்பி அமர்ந்துள்ளார். தொடர்ந்து இளைஞர் பெண்மருத்துவரை நோக்கி அமர்ந்து,பிறப்புறுப்பை வெளிப்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மருத்துவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தனியார் உணவகத்தில் பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த செல்வா வை (25] கைது செய்தனர்..நேற்று முன் தினம் பேருந்தில் பயணித்த திரை நடிகையிடம் இதே போன்று ஆபாசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :