போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

by Admin / 20-05-2023 09:20:59am
போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

. கடலூர் காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முத்து சேர்வா மடம் வீல்வேந்திரன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது மதிக்கத்தக்க மாணவியை ஆசை வார்த்தை கூறி அவரோடு தொடர்பில் இருந்து உள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமாகி உள்ளார். தன் கர்ப்பத்திற்கு காரணமான ஆசிரியரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி வலியுறுத்தி வந்துள்ளார் .இதனை மறுத்த ஆசிரியர் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கண்டிப்போடு சொல்லியதை அடுத்து மாணவி தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி உள்ளார். அவர்கள் நாட்டு வைத்திய முறைப்படி மாணவினுடைய கர்ப்பத்தை கலைத்து விட்டு ,பின்பு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆசிரியர் வில்வேந்திரனை போக் சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
 

Tags :

Share via