ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை அனுமதி

by Staff / 21-10-2023 02:15:00pm
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை அனுமதி

புதுவை அரசு பள்ளி களில் இந்த ஆண்டு முதல் சி. பி. எஸ். இ. பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டு ள்ளது. இதனையடுத்து தொடக்க பள்ளி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கல்விதுறை முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். எனவே விரைவில் 145 தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிட ங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

Tags :

Share via