புதுவையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Staff / 21-10-2023 02:10:56pm
புதுவையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் இஸ்ரேல் போர் வெறியை கண்டித்து காமராஜர் சிலை சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் நாராகலைநாதன் தலைமை வகித்தார். வக்கீல் சாமிநாதன், ஜீவானந்தம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கீதநாதன், சுப்பையா, பிரதீஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via