மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் ஓட்டம் போலீஸ் தேடல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக உள்ளார்.இவர் குடிபோதையில் மனைவி அங்கயற்கண்ணியுடன் (49) சொத்திற்காக தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மனைவியுடன் தகராறு செய்து, வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் அதிகரித்ததால் ஆறுமுகம் கோடாரியால் அங்கயற்கண்ணியின் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு ஓடி விட்டார்.இதுகுறித்து போலீசார் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.
Tags :