லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி
சேலம் மேச்சேரியில் பழமைவாய்ந்த சவுந்தரநாயகி அம்மன் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை காலை சூரிய கதிர்கள் விழுவது வழக்கம். கோவில் நுழைவுவாயில் உள்பக்கம் உள்ள நந்தி சிலை மீது சூரிய ஒளி பட்டு லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். நேற்று காலை கோவில் நுழைவுவாயில் நந்தி சிலை மீது சூரிய ஒளி பட்டு லிங்கத்தின் மீதும் சூரிய ஒளி கதிர்கள் விழுந்தது.
Tags :