சங்கரன்கோவில் அருகே கார் தனியார் பள்ளி வாகனம் மோதி 5 பேர் உயிரிழப்பு.

by Editor / 24-05-2023 08:34:48pm
சங்கரன்கோவில் அருகே கார் தனியார் பள்ளி வாகனம் மோதி 5 பேர் உயிரிழப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை குருசாமி (45) குருசாமியின் மனைவி வேலுத்தாய் (35)  மாமியார் உடையம்மாள் (60) குருசாமி மகன்  மனோஜ் குமார் (22) உள்ளிட்டநபர்கள்  காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி திரும்பி கொண்டுஇருந்தனர். காரை மேல  ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது  சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் இயங்கும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகளை பள்ளி திறப்பதற்கு முன்னர் கோடைகால வகுப்பை  முடித்து விட்டு மாணவ,மாணவிகளின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பனவடலிசத்திரம் நோக்கி பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது.

பனவடலிசத்திரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அப்போது காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி, வேலுத்தாய், உடையம்மாள், மனோஜ் குமார், ஓட்டுநர் அய்யனார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இவற்றில் தனியார் பள்ளி மாணவிகள் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் பனவாடி நட்சத்திரம் போலீசார் ஐந்து பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தகவல் அறிந்து தென்காசி ஆட்சியர் துரைரவிச்சந்திரன், கோட்டாட்சி தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காவல்துறையினிடம் விசாரணை மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் அருகே கார் தனியார் பள்ளி வாகனம் மோதி 5 பேர் உயிரிழப்பு.
 

Tags : tenkasi Car collides with private school vehicle, 5 killed

Share via