6வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

by Staff / 31-05-2023 12:40:21pm
6வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 6 நாட்களுக்கு முன் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஒப்பந்ததாரர் சங்கரின் அலுவலகம், செந்தில் பாலாஜி நண்பரின் உணவு விடுதி ஆகியவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர் தங்கராஜ் வீட்டில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் வீடு பூட்டப்பட்டிருந்ததால் எகிறிக் குதித்து சென்றது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via