மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய மோதல் உருவாகும்-பிரேமலதா விஜயகாந்த்

by Editor / 01-06-2023 10:21:19am
மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய மோதல் உருவாகும்-பிரேமலதா விஜயகாந்த்


குலதெய்வ வழிபாட்டிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு:

தமிழக முதல்வரின் துபாய் பயணத்தின் போது எத்தனை இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கொடுத்தார் முதலீடுகள் கொண்டு வந்தார்.? ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரான தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறி உள்ளது.மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய மோதல் உருவாகும், செங்கோல் தமிழர்களின் புகழ் போற்றப்பட வேண்டும் அதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்,மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்., இந்தியாவிற்காக விளையாடிய பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை., அவர்கள் துறை சார்ந்தவர்கள் மூலம் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கான நல்ல ஒரு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via