போக்சோ வழக்கில் கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை.

by Editor / 01-06-2023 10:27:53am
போக்சோ வழக்கில் கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சுப்பிரமணி (67)  இவர் கடந்த 2017 ஆம் வருடம் ஜுலை மாதம் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பெற்றோர் எ. பள்ளிப்பட்டி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்துவந்தது. இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது. தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட் நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

Tags : கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை.

Share via