காஷ்மீர் பயங்கரவாதிகள் மோதல்
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் காவல் துறையுடன் இணைந்து ரஜோரி பகுதியில் இன்று அதிகாலை முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
Tags :