பட்டினியால் தவிக்கும் பாலஸ்தீனியர்கள்

by Staff / 18-02-2024 03:45:45pm
பட்டினியால் தவிக்கும் பாலஸ்தீனியர்கள்

காசாவில் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. சுமார் 20 இலட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, கடைசியில் வயிற்றுக்கு உணவளிக்க முடியாத நிலையை அடைந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதாக அல் ஜசீரா செய்தியாளர் தரேக் அபு அஸூம் தெரிவித்தார். இதற்கு போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via