ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாள விஜயகாந்த்

by Staff / 03-06-2023 03:27:22pm
ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாள விஜயகாந்த்

ஒடிசா ரயில் விபத்து குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா ரயில் விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களும் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via