விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

by Staff / 04-06-2023 02:25:45pm
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சித்திரமேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via