பால்கனி இடிந்து விழுந்து சிறுவன் பலி

by Staff / 04-06-2023 04:05:00pm
பால்கனி இடிந்து விழுந்து சிறுவன் பலி

ஐதராபாத்தில் உள்ள பிரகதி நகரில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்டர். இந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தான். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டின் பால்கனி வலுவற்று இருந்ததால் திடீரென இடிந்து விழுந்துள்ளது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via