தாய்க்கு திதி கொடுத்த மகன் தற்கொலை.

by Staff / 17-01-2023 05:18:57pm
தாய்க்கு திதி கொடுத்த மகன் தற்கொலை.

பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (34). கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவரது தாயார், கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாயாரின் நினைவு நாளுக்கு திதி கொடுக்க சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவர், தனது கணவரை ஈரோடு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via