பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர் கைது

by Admin / 25-07-2023 07:17:09pm
பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர் கைது

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை திருமலை நகரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி சுதா (37) என்பவர் அவரது வீட்டில் தனது அப்பாவான வையனசாமி (68) மற்றும் 12 வயது மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். தற்போது சுதாவின் கணவர் நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் மேற்படி சுதாவின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து சுதா கதவை திறந்த போது அந்த நபர் சுதா அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சுதா சத்தம் போட்டாதால் அவரை தாக்கி விட்டு மர்மநபர் தப்பி சென்றுவிட்டார்.

இதனையடுத்து சுதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ் நகரை சேர்ந்த வெள்ளைசாமி மகன் தவிட்டுராஜ் (31) என்பவர் மேற்படி சுதாவிடம் தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குபதிவு செய்து தவிட்டுராஜை கைது செய்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர் கைது
 

Tags :

Share via