நடுவானில் பயணி கைது

by Staff / 27-06-2023 03:09:24pm
நடுவானில் பயணி கைது மும்பை - டெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் தரையில் மலம், சிறுநீர் கழித்ததாக கூறி பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏஐசி 866 விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொது இடங்களில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் ராம் சிங் என்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அண்மைக்காலமாக விமானத்தில் பயணிகள் இதுபோன்று அநாகரியமாக நடந்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via