45 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு. 

by Editor / 29-06-2023 04:48:01pm
45 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.  தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்தது சேர்ந்த மரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிடைத்தது.  காவல்துறை ஆய்வாளர் ராஜா  உத்தரவின்படி சேர்ந்தமரம் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் மற்றும் ராமஜெயம் பால்ராஜ் ஆகியோர் சேர்ந்தமரம்  பழைய காவல் நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சரக்கு வாகனத்தில் 2000 கிலோவுக்கு மேல் ரேஷன் அரிசி சங்கரன்கோவில் சுரண்டை சாலை வழியாக கொண்டு  வந்தது தெரிய வந்தது.  அப்போது சரக்கு வாகனத்தில்  45மூடைகளில் சுமார் 2,000கிலோ ரேஷன் அரிசிக்குமோல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஓட்டி வந்த சுந்தரபாண்டியபுரம் மாரப்பபாரைதெருவில்வசித்துவரும்மாசானம்என்பவரின்மகன்சுடலை என்பவரை கைது செய்து சரக்கு வாகனத்துடன் அவரிடம் இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும் விசாரணையில் சங்கரன்கோவில் இருந்து கண்ணன் என்பவர் கீழப்பாவூர் கண்ணன் ரைஸ் மில்லிற்கு அனுப்பி இறக்குமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 

Tags :

Share via