திடீரென முளைத்த சுற்றுலாத்தலம் - சூரியகாந்தி மலரை காண படை எடுத்து வரும் சுற்றுலா பயணிகள்.

by Editor / 02-07-2023 10:58:40pm
 திடீரென முளைத்த சுற்றுலாத்தலம் - சூரியகாந்தி மலரை காண படை எடுத்து வரும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றால அருவிகள் தான்.
இந்த குற்றால அருவிகளில் வருடம் தோறும் 3 மாதங்கள் மழைக்கால சீசன் களைகட்டும் அதே வேளையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, சுரண்டை, கம்பளி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகும்.

 அந்த வகையில், தற்போது அகரக்கட்டு பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு கண்ணை கவரும் வகையில் சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ளன.

 தற்போது, பூத்துள்ள இந்த சூரியகாந்தி மலரை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்து மலரின் அழகை ரசித்தபடி மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, சீசன் காலகட்டம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர்களை காண வருவது வழக்கம்.

 அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதல் குற்றால அருவிகளுக்கு வருகை தந்த நிலையில், தற்போது அகரக்கட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலரை காண படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

 மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது இந்த சூரியகாந்தி மலரை காண வருகை தந்துள்ள சூழலில், தங்களது குடும்பங்களுடன் சூரியகாந்தி மலரின் நடுவே நின்றபடி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

 திடீரென முளைத்த சுற்றுலாத்தலம் - சூரியகாந்தி மலரை காண படை எடுத்து வரும் சுற்றுலா பயணிகள்.
 

Tags :

Share via